இலையுதிர்காலம்
=================
1
Getting old colorfully ...
இதுதானோ?
2
பச்சை நிற ஃபர்தாவை களைந்து
பட்டாம்பூச்சிகளாய் வண்ணம் பூண்டன
இந்த வாசமில்லாப் பூக்கள் ...
இது.. இலையுதிர்காலமல்ல...
இலைமலர்காலம்..
வசந்த காலம்
===========
1
உயிர்த்தெழுதலைக் கொண்டாட ...
விழாவெடுக்கின்றன மரங்கள்...
=======================
2
பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?
========================
குளிர்காலம்
=========
1
குளிரும் காலை ...
சூரியனை வரவேற்க ஜன்னல் திரை விலக்கினேன்...
வெண்பஞ்சு மேகக்கூட்டம் வாசலில்..
இரவெல்லாம் பெய்த பனிக்குவியல்...
=======================================
2
சூடு தாங்காமல் உருகி நின்றது
கையில் விழுந்த நட்சத்திரம் ...
இல்லை.. பனித்துகள்!
=======================
3
இலைகளை உதிர்த்து...
பசுமையைத் தொலைத்து...
விதவையான மரங்களுக்கு ...
வெள்ளாடை போர்த்துகிறது...
பனி...
==================
4
தும்பைப் பூமாரி பொழிகிறது ...
வழியங்கும் வெண்பட்டாடை விரிப்பு...
தேவதைகள் உடலெங்கும் பூக்களை ஏந்தி ....
சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன ....
வெண்முத்துப் பல்லக்கில் ...
மெல்ல ஊர்வலம் போகின்றேன்...
பனிமழை பெய்கிறது...
=================
5
Icecream சாப்பிட்ட சிறுகுழந்தையாய்
அங்கங்கே அப்பிக்கொண்டு சொட்டும்
பனியைத் தாங்கி நிற்கும் மரம்...
*************************************
10 comments:
colorful kavaithaikal
Dear Anitha
This is Rathi. Romba naal kazhichu unnoda kavithaigal padikaren. I see a marked changed in the mood of your poems now. Keep the good stuff going.
Love
Rathi
Dear Anitha
This is Rathi. Romba naal kazhichu unnoda kavithaigal padikaren. I see a marked changed in the mood of your poems now. Keep the good stuff going.
Love
Rathi
Hi anitha,
Nalla irukku...enakku kavithai-galaivida I liked the pictures...
Gopi
அனிதா
என்னை மாதிரி ஆட்களுக்கே புரியற அளவுக்கு மிக எளிமையான கவிதைகள்... மிகவும் ரசித்தேன்.... :)
புகைப்படங்கள் மிகவும் பொருத்தமாக இருந்தது...... உன்னிடம் உள்ள மற்ற புகைப்படங்களையும் தனியாக பதிவு செய்யவேண்டும் என்பது என்னுடய விருப்பம்....
அன்புடன்
காஞ்சனா
நல்ல கவிதைகள் அனிதா.
//பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?//
இவை நான் மிகவும் ரசித்த வரிகள்.
நன்றி
கமல்
www.varalaaru.com
அழகான படங்களும் அழகான வரிகளும். வாழ்த்துக்கள்.
வந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி! especially to varalaaru.com and சோமி (becasuse rest are my friends)
- அனிதா
Good website... I liked the simplicity of your poem to make the common man understand!!
Great job and keep up the good work!
Thanks Antro. I am hard-pressed for time these days.
Post a Comment